Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதியின் தவணைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டுமா?

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.27-

நாட்டின் தலைமை நீதிபதியாக வீற்றிருக்கும் துன் தெங்கு மைமுன் துவான் மாட்டின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ சாயிட் இப்ராஹிம் விடுத்துள்ள கோரிக்கைக்கு மூன்று வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரின் இந்த பரிந்துரை, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 125 க்கு முரணானது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரான Bastion Pius Vendargon தெரிவித்துள்ளார்.

சேவையில் இருந்து வரும் நீதிபதிகள்,கூடிய பட்சம் 66 வயது வரை மட்டுமே பணியாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வகை செய்வதாக அந்த சட்ட நிபுணர் சுட்டிக்காட்டினார்.

இந்த வயதை அடைந்தவர்கள், மேலும் 6 மாத காலத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்கு அனுமதி அளிப்பதற்கு மாமன்னருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதையும் Bastion Pius Vendargon சுட்டிக்காட்டினார்.

டத்தோ சாயிட் இப்ராஹிமின் இந்த பரிந்துரை, மாமன்னர் மற்றும் பிரதமரின் பங்களிப்பை மீறுவதாக உள்ளது என்று அந்த சட்ட நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை