வங்கிகளுக்கு இடையிலான ஓ.பி.ஆர் வட்டி விகித கொள்கையை 3.00 விழுக்காடாக நிலைநிறுத்துவதற்கு மத்திய வங்கியான Bank Negara Malaysia-வின் நிதிக்கொள்கைப் பிரிவு முடிவு செய்துள்ளது.
நாட்டில் கடன் மற்றும் வைப்புத் தொகைக்கான வட்டி வகிதத்தை நிலைநிறுத்துவதென மத்திய வங்கி எடுத்துள்ள இந்த முடிவானது, கடந்த ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து இது ஆறாவது முறையாகும்.
நீடித்த சந்தைக்கு நிகராக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








