Apr 1, 2026
Thisaigal NewsYouTube
13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Share:

டிச. 30-

கிளாந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து, ஜோகூரிர் மாநிலமும் புதிய வெள்ளப்பெருக்கு ஏஅலையைச் சந்தித்துள்ளது. பலத்த மழை காரணமாக கோத்தா திங்கி மாவட்டத்தில் 13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 637 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிளாந்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரெங்கானுவில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஜோகூரில் வெள்ளம் புதிதாக ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வானிலை தொடர்ந்து மாறக்கூடிய நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்