Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் ஒருவர் பலி, ஐவர் படுகாயம்

Share:

லோரோங் பண்டார் ஹீலிர், மார்ச்.21-

மலாக்கா, லோரோங் பண்டார் ஹீலிரில் இரண்டு மாடி தரை வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டதில் ஒருவர் மாண்டதுடன் இதர ஐவர் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3.58 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்ப இடத்திற்கு விரைந்த மலாக்கா தெங்கா மற்றும் பாடாங் தெமு ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் இருக்க, தீயை முழு வீச்சில் கட்டுப்படுத்தினர்.

இத்தீவிபத்தில் தரை வீடு 70 விழுக்காடு சேதமுற்றது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மேல் மாடியில் சிக்கிக் கொண்டனர். ஐவர் மீட்கப்பட்ட வேளையில் ஒருவர் இறந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று மலாக்கா தீயணைப்பு மீட்புப்படை முதிர் நிலை அதிகாரி சுஹாய்மி ஆதான் தெரிவித்தார்.

காயமுற்ற ஐவரில், நால்வர் 50 க்கும் 76 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் ஆவர். எஞ்சிய நபர் 38 வயதுடைய ஒரு பெண் என்று சுஹாய்மி ஆதான் விளக்கினார்.

காயமுற்ற ஐவரும் மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து