Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அன்வாரின் வெளிநாட்டுக் கணக்குகள் குறித்த குற்றச்சாட்டுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே பொய்யென நிரூபிக்கப்பட்டு விட்டன – எஸ்பிஆர்எம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

அன்வாரின் வெளிநாட்டுக் கணக்குகள் குறித்த குற்றச்சாட்டுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே பொய்யென நிரூபிக்கப்பட்டு விட்டன – எஸ்பிஆர்எம் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.26-

இஸ்ரேல் உட்பட 20 நாடுகளில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகள், கடந்த 1999-ஆம் ஆண்டே விசாரிக்கப்பட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

அன்வாருக்கு எதிராக ஊழல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கான எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை என்று அப்போதைய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளதையும் எஸ்பிஆர்எம் மேற்கோள் காட்டியுள்ளது.

அண்மையில் டிக் டாக்கில் பகிரப்பட்டு வரும், அன்வாருக்கு எதிரான காணொளி ஒன்றுக்கு பதிலளித்துள்ள எஸ்பிஆர்எம், இவ்வழக்கை விசாரணை செய்த முன்னாள் புலனாய்வு இயக்குநர் டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ் தனது விசாரணையின் உண்மைத்தன்மை குறித்து சத்திய பிரமாணம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதோ அல்லது ஒரு தனிநபரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காணொளி வெளியிடுவதோ வேண்டாம் என்றும் எஸ்பிஆர்எம் அனைத்துத் தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளது.

அவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவது குழப்பத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்