Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் வெளிநாட்டுக் கணக்குகள் குறித்த குற்றச்சாட்டுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே பொய்யென நிரூபிக்கப்பட்டு விட்டன – எஸ்பிஆர்எம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

அன்வாரின் வெளிநாட்டுக் கணக்குகள் குறித்த குற்றச்சாட்டுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே பொய்யென நிரூபிக்கப்பட்டு விட்டன – எஸ்பிஆர்எம் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.26-

இஸ்ரேல் உட்பட 20 நாடுகளில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகள், கடந்த 1999-ஆம் ஆண்டே விசாரிக்கப்பட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

அன்வாருக்கு எதிராக ஊழல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கான எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை என்று அப்போதைய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளதையும் எஸ்பிஆர்எம் மேற்கோள் காட்டியுள்ளது.

அண்மையில் டிக் டாக்கில் பகிரப்பட்டு வரும், அன்வாருக்கு எதிரான காணொளி ஒன்றுக்கு பதிலளித்துள்ள எஸ்பிஆர்எம், இவ்வழக்கை விசாரணை செய்த முன்னாள் புலனாய்வு இயக்குநர் டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ் தனது விசாரணையின் உண்மைத்தன்மை குறித்து சத்திய பிரமாணம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதோ அல்லது ஒரு தனிநபரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காணொளி வெளியிடுவதோ வேண்டாம் என்றும் எஸ்பிஆர்எம் அனைத்துத் தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளது.

அவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவது குழப்பத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து