சபா மாநிலம் மெங்கலும் தீவு அருகே ஏற்பட்ட படகு மோதல் விபத்தில், கடலில் விழுந்த இளைஞரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த மே 4-ஆம் தேதி, காலை 9.30 மணியளவில், 21 வயதான நூர் அமின் என்ற இளைஞர் பயணித்துக் கொண்டிருந்த படகானது, மற்றொரு படகுடன் மோதியதில், கடலில் விழுந்த அவர் மாயமானதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரைத் தேடி வந்த நண்பர்கள், இன்று காலை கோத்தா கினபாலு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை முதல், நூர் அமின் மாயமானதாகக் கூறப்படும் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.








