Feb 28, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி
தற்போதைய செய்திகள்

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

Share:

ஷா ஆலாம், பிப்ரவரி.28-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் தேடப்பட்டு வரும் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஸைனுடினின் நான்கு பிள்ளைகளில் மூவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் குடிநுழைவுத் துறைத் தலைவர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறை பதிவுகளின்படி, அவர்களில் மூவர் கடந்த ஜனவரி இறுதி மற்றும் இந்த மாதத் தொடக்கத்தில் மலேசியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

தேடப்படும் நான்கு பேரில் ஒருவர் மட்டும் இன்னும் நாட்டிற்குள்ளேயே இருக்கலாம் எனக் கருதப்படுகிறது; அவரிடம் நாட்டை விட்டு வெளியேறியதற்கான எந்தப் பயணப் பதிவும் இல்லை.

விசாரணையை எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வருவதால், அவர்கள் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட முடியாது டத்தோ ஸாகாரியா தெரிவித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் கீழ் நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவும் வகையில், டாயிமின் நான்கு பிள்ளைகளையும் தேடி வருவதாக எஸ்பிஆர்எம் நேற்று அறிவித்திருந்தது. அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயணத் தகவல்களையும் குடிநுழைவுத் துறை வழங்கி வருவதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்