Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இரு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு 12 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

இரு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு 12 ஆண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், ஜூன்.17-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 11 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றத்திற்காக இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒவ்வொருவருக்கும் தலா 5 பிரம்படித் தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஹஸ்ரோல் இர்மேய் அபு ஹசிம், முகமட் ஹெல்மி ஜமாலுடின், அமிர் மொக்தார் மற்றும் முகமட் ரிட்வான் அஸ்மான் ஆகிய நால்வரும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் சான் சோவ் லின்னில் உள்ள ஒரு கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ங்கான் ஹொக் லியோங் என்ற வர்த்தகரை மடக்கி ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படைச் சந்தேகங்களை எழுப்புவதில் அவர்கள் தவறிவிட்டனர் என்று நீதிபதி ஹமிடா முகமட் டெரி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை