ஓர் இந்தியப் பிரஜையான விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டு, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி தூக்கி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓர் இந்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சிலாங்கூர், செரி கெம்பாங்கான், தாமான் புக்கிட் செட்டாங்கில் உள்ள இரும்புக்கடை வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய எஸ்.துரைராஜ் என்ற தம்பி ச்ஹை என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ்.துரைராஜ்ஜின் ஆகக்கடைசியான முகவரி, எண்.03-11 பங்சாபூரி ருசீலியா, தாமான் பிங்கிரான் புத்ரா, செரி கெம்பாங்கான், சிலாங்கூர் என்பதாகும் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ.அ. அன்பழகன் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபரை கண்டவர்கள் அல்லது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


