ஓர் இந்தியப் பிரஜையான விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டு, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி தூக்கி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் ஓர் இந்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் சிலாங்கூர், செரி கெம்பாங்கான், தாமான் புக்கிட் செட்டாங்கில் உள்ள இரும்புக்கடை வளாகத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய எஸ்.துரைராஜ் என்ற தம்பி ச்ஹை என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ்.துரைராஜ்ஜின் ஆகக்கடைசியான முகவரி, எண்.03-11 பங்சாபூரி ருசீலியா, தாமான் பிங்கிரான் புத்ரா, செரி கெம்பாங்கான், சிலாங்கூர் என்பதாகும் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ.அ. அன்பழகன் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபரை கண்டவர்கள் அல்லது அந்த நபர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


