கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சாலை விபத்தொன்றில் உயிரிழந்ததாக கூறப்படும் வங்கி மேலாளரான சையத் முஹம்மது டேனியல் சையத் சியாகிர் - ரின் விபத்துக்குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நேற்று படிக்கும் பொழுது அவர் மனைவி கதறி அழுந்தார்.
32 வயதுடைய வங்கி மேலாளரான கிஸ்டினா ஆயு ரோஜான் விபத்தில் தன் கணவர் உயிரிழந்ததை இன்னும் தன் மகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இருப்பதையும் விவரித்திருந்தார்.
நான்கு வயதுடைய மகள் தன் தந்தையை மூன்று மாத குழந்தையாக இருக்கும் பொழுது இழந்துள்ளார். ஒவ்வொரு நாளும் அச்சிறுமி தன் தந்தையை பற்றி கேட்பது பெரும் வேதனையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முஹம்மது டேனியல் விபத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி உயிரிழந்த போதிலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் மனக்கசப்பில் இருப்பதாக கிஸ்டினா ஆயு கூறினார்.








