வர்த்தக நடவடிக்கைத் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் விசாரணை செய்யப்பட்டு வரும் அந்த வர்த்தகர், முன்னாள் பிரதமரின் புதல்வர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்றிரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த வர்த்தகரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மலேசியாவில் வரி ஏய்ப்பு செய்து, கோடிக்கணக்கான வெள்ளியை வெளி நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக கூறப்படும் மலேசிய பிரமுகர்களின் பெயர்களை பனமா பேப்பர்ஸ் அண்மையில் அம்பலப்படுத்தியது.
அவர்களில் முன்னாள் பிரதமர் மகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


