வர்த்தக நடவடிக்கைத் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் விசாரணை செய்யப்பட்டு வரும் அந்த வர்த்தகர், முன்னாள் பிரதமரின் புதல்வர் என்பது தெரியவந்துள்ளது.
நேற்றிரவு 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த வர்த்தகரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மலேசியாவில் வரி ஏய்ப்பு செய்து, கோடிக்கணக்கான வெள்ளியை வெளி நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக கூறப்படும் மலேசிய பிரமுகர்களின் பெயர்களை பனமா பேப்பர்ஸ் அண்மையில் அம்பலப்படுத்தியது.
அவர்களில் முன்னாள் பிரதமர் மகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


