சரவா மாநிலத்தின் முன்னாள் அரசியல் தலைவரும் மாநில ஆளுநருமான துன் அப்துல் தாயிப் மஹ்மூத் உடல் நிலை குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுபட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் தங்கி சிகிச்சைப்பெற்று வரும் ஆளுநர் அப்துல் தாயிப் குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று சரவா மாநில ஆளுநரின் செயலாளர் ஜூனின் சலே அகமது கேட்டுக்கொண்டுள்ளார்.
87 வயதான அப்துல் தாயிப் விரைவில் நாடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தமது 74 ஆவது வயதில் 30 வயதுடைய சிரியா பெண்ணான ரகாத் வலீத் அல்குர்தி யை மணந்து கொண்ட ஆளுநர் அப்துல் தாயிப், சுகவீன காரணமாக தற்போது வெளிநாட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


