மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையிலும், மலேசியா முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் இறுதி வரை தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதை பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவையில் 50 சதவீதத்தைப் பெட்ரோனாஸ் பூர்த்தி செய்யும் வேளையில், எஞ்சிய தேவையை மற்ற எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன. மலேசியா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், ஈரானுடனான போர் பதற்றம் காரணமாக நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருளைக் குவித்து வைக்க வேண்டாம் என்றும், தங்களின் அன்றாடத் தேவைக்கு ஏற்பப் பொறுப்புடன் வாங்குமாறும் பெட்ரோனாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.








