Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பேரணி பாதுகாப்புடன் நடைபெறுவது உறுதிச் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பேரணி பாதுகாப்புடன் நடைபெறுவது உறுதிச் செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

கோலாலம்பூர் மாநகரில் நாளை சனிக்கிழமை நடைபெறவிக்கும் பேரணி, முழுப் பாதுகாப்புடன், சுமூகமாக நடைபெறுவதை போலீசார் எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்வர் என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் உறுதி தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணி சுமூகமாக நடைபெறுவதற்கு இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐஜிபி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நடைபெறும் துருன் அன்வார் பேரணியில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் பங்கு கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலை நிறுத்தப்பட்டு வரும் ஜனநாயக உரிமைக்கு ஏற்ப இந்தப் பேரணி நடைபெற்றாலும், அந்த உரிமைக்கு போலீசார் மதிப்பளிப்பதாக டத்தோ ஶ்ரீ காலிட் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது