Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஆசியா விமானம் தரையிறக்கம் - விசாரணை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

ஏர் ஆசியா விமானம் தரையிறக்கம் - விசாரணை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.28-

ஏர் ஆசியா விமானம் ஒன்று, நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கேஎல்ஐஏ 2 இல் அவசரமாகத் தரை இறங்கியது குறித்து மலேசிய வான் போக்குவரத்து கழகமான CAAM விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரிலிருந்து இரவு 9.59 மணியளவில் சீனா, Shenzhen- னுக்கு, 171 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் புறப்பட்ட அந்த ஏர்பஸ் A320 விமானத்தின் வலப்புற இயந்திரத்தில் தீப்பிடித்துக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், அந்தத் தகவலை ஏர் ஆசியா மறுத்துள்ளது.

எனினும் ஏர்பஸ் விமானம், மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பி, அவசரமாகக் தரையிறங்கியது தொடர்பில் உண்மையான காரணத்தைக் கண்டறிவற்கு மலேசிய வான் போக்குவரத்து கழகம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

விமானங்களின் எந்தவோர் அவசர தரையிறக்கமும் CAAM அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்