கனடாவில் தயாரிக்கப்படும் 150 ஏர்பஸ் ஏ220-300 பயணிகள் விமானங்களை வாங்க ஏர்ஏசியா எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் எஸ்.இ.-க்கு முக்கிய வர்த்தக வெற்றியாகக் கருதப்படுகிறது.
தென்கிழக்காசியாவில் செயல்பட்டு வரும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியாவின் இணை நிறுவனரான டோனி பெர்னாண்டஸ், கனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள மிராபெல் நகரில் அமைந்துள்ள ஏர்பஸ் கனடா தொழிற்சாலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஏ220-300 வகை விமானங்களில் அதிகபட்சமாக 160 பயணிகள் வரை அமர முடியும்.
பெரிய அளவிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்காக விமான நிறுவனங்களுக்கு வழக்கமாக குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








