May 18, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

Share:

கோலாலம்பூர், மே.18-

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பில் அரசாங்கத் தலைமை செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பாக்காரும் கலந்து கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இச்சந்திப்பு நடைபெற்றதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பிரிவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அன்வார் நேற்று ஜோகூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இன்று இச்சந்திப்பு நடப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, கூட்டணிக்குள் உள்ள ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால் ஜோகூர் மட்டும் அல்லாமல் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பகாங் மற்றும் பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அன்வார் அறிவித்திருந்தார்.

இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமையுடன் விவாதிக்க இருப்பதாகவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை