Feb 13, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில்  வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

செந்தூலில் வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

கோலாலம்பூர் ஜாலான் செந்தூல் சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீடற்ற பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட 46 வயது நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை போலீஸ் துறை உறுதிச் செய்துள்ளது.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இது குறித்து கூறுகையில், சந்தேக நபர் பிப்ரவரி 10 முதல் 15-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனையில், மர்மமான கனமான பொருளால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டதே அந்தப் பெண்ணின் மரணத்திற்குத் தற்காலிகக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒன்பது சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயிரிழந்த பெண் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்கவர். அவரது அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

கொலைக்கான காரணம் மற்றும் அந்தப் பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து செந்தூல் மாவட்ட போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர் என்று டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

Related News

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்

கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்

நிச்சயதார்த்தப் பெண் ஏமாற்றியதால் ஆத்திரம்: சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய முன்னாள் காதலன் - சபாவில் பயங்கரம்

நிச்சயதார்த்தப் பெண் ஏமாற்றியதால் ஆத்திரம்: சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய முன்னாள் காதலன் - சபாவில் பயங்கரம்

மலாக்கா: பூங்கா கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - 18 வயது இளம் பெண் கைது

மலாக்கா: பூங்கா கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - 18 வயது இளம் பெண் கைது

ஈப்போ-லுமுட் சாலை விபத்து: 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

ஈப்போ-லுமுட் சாலை விபத்து: 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி