Mar 24, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசின் சாட்சியே தவிர சந்தேக நபர் அல்ல
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசின் சாட்சியே தவிர சந்தேக நபர் அல்ல

Share:

சைபர்ஜெயா, ஆகஸ்ட்.07-

முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் அவர் ஒரு சாட்சியே தவிர அவர் விசாரணைக்குரிய நபர் அல்ல என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

எம்சிஎம்சி மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் அந்த முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் தேவைப்படுகிறது. எனவே அவர் சாட்சியாக அழைக்கப்படுகிறார் என்று அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 இலக்குக்கு உரிய மானியம் தொடர்பில் முகைதீன் யாசின் டிக் டோக்கில் வெளியிட்ட காணொளி தொடர்பில் எம்சிஎம்சி தற்போது விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணையில் தங்களின் முழு கவனம், அதன் உள்ளடக்கமே தவிர அதன் குற்றச்சாட்டோ அல்லது வாதமோ அல்ல என்று எம்சிஎம்சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்: அண்டை வீட்டார் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்த சோகம்

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்: அண்டை வீட்டார் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்த சோகம்

நெடுஞ்சாலைகளில் 28 லட்சம் வாகனங்கள்: மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் மக்கள்

நெடுஞ்சாலைகளில் 28 லட்சம் வாகனங்கள்: மீண்டும் நகரங்களுக்குத் திரும்பும் மக்கள்

நவீன பிச்சைக்காரர்கள்': சமூக வலைதளங்களில் கோடிகளைக் குவிக்கும் போலி நன்கொடை மோசடிகள்

நவீன பிச்சைக்காரர்கள்': சமூக வலைதளங்களில் கோடிகளைக் குவிக்கும் போலி நன்கொடை மோசடிகள்

சிபாடான் ‘ஆமை’ குகையில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

சிபாடான் ‘ஆமை’ குகையில் புதிய கடல்வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு

பாடாங் செராயில் துப்பாக்கிச் சூடு: நண்பர்களுக்கு இடையிலான வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது

பாடாங் செராயில் துப்பாக்கிச் சூடு: நண்பர்களுக்கு இடையிலான வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது

மரம் விழுந்து இளைஞர்  பலி: கோலாலம்பூர் மாநகர் மன்றம் 8.24 லட்சம் ரிங்கிட்  இழப்பீடு வழங்க உத்தரவு

மரம் விழுந்து இளைஞர் பலி: கோலாலம்பூர் மாநகர் மன்றம் 8.24 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவு