Jul 4, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசின் சாட்சியே தவிர சந்தேக நபர் அல்ல
தற்போதைய செய்திகள்

முகைதீன் யாசின் சாட்சியே தவிர சந்தேக நபர் அல்ல

Share:

சைபர்ஜெயா, ஆகஸ்ட்.07-

முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் அவர் ஒரு சாட்சியே தவிர அவர் விசாரணைக்குரிய நபர் அல்ல என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.

எம்சிஎம்சி மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் அந்த முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் தேவைப்படுகிறது. எனவே அவர் சாட்சியாக அழைக்கப்படுகிறார் என்று அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 இலக்குக்கு உரிய மானியம் தொடர்பில் முகைதீன் யாசின் டிக் டோக்கில் வெளியிட்ட காணொளி தொடர்பில் எம்சிஎம்சி தற்போது விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணையில் தங்களின் முழு கவனம், அதன் உள்ளடக்கமே தவிர அதன் குற்றச்சாட்டோ அல்லது வாதமோ அல்ல என்று எம்சிஎம்சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்