ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, லெபோ இஸ்மாயில் சுல்த்தான் , லெபோ மெடினி உத்தாமா ஆகிய சாலைகளில் ஒபி காஸ் சோதனையை காவல் துறை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டது. அதில் 66 மோட்டார் சைக்கிள்கள், 46 கார்கள் பறிமுதல் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தகவல் அளித்த இஸ்கன்டார் புத்தெரி மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவிக்கயில், பல்வேறு சாலைப் போக்குவரத்துக் குற்றங்களுக்காக 422 அபராதச் சீட்டுகள் அந்தச் சோதனையில் வெளியிடப்பட்டன.
மாட் ரெம்பிட் எனப்படும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவர்களையும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அவ்வப்போது இது போன்ற சோதனை நடவடிக்கைகள் மேகொள்ளப்படும் என ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார்.







