நேற்று மாலை 3.30 மணியளவில் குபாங் பாசு மாவட்டத்தில் வீசிய பலத்தப் புயல் காரணமாக கம்போங் பீடா 3 மற்றும் கம்போங் பீடா பாரு 4 ஆகிய இடங்களில் பல வீடுகள் சேதமடைந்தததாக பொது தற்காப்பு படையான ஏபிஎம் தெரிவித்துள்ளது.
இந்தப் பேரிடர் தொடர்பில் மாலை 3.45 மணிக்குத் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகக் குபாங் பாசு மாவட்ட ஏ.பி.எம். அதிகாரி கேப்டன் முஹமாட் அடெனின் சுஹைமி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குபாங் பாசுவில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கனத்த மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் உயிருடற்சேதம் குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சொத்துகளின் சேத மதிப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறிய அவர், குபாங் பாசு மாவட்டச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அப்பகுதியைக் கண்காணித்து, குப்பைகளைச் சுத்தம் செய்ய உதவி வருகிறது என்றார்.
Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


