சுற்றுலா மேற்கொள்வதற்கு பாதுகாப்பான தீவுகள் அல்ல என்று சபா, குடாட் மற்றும் அதனை சுற்றியுள்ள பவளப்பாறைத் தீவுகளை தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் குறிப்பிட்டு இருந்த பிரிட்டன், அந்த தடையை அகற்றியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு சபாவில் லாஹாட் டத்துவில் நிகழ்ந்த சூலு தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து சபா தீவுகள் முக்குளிப்பு மற்றும் இதர கடல் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று பிரிட்டன் தனது சுற்றுலா வழிகாட்டல் புத்தகத்தில் இடம் பெற செய்து இருந்தது.
கிழக்கு சபாவின் பாதுகாப்பு நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.








