Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானிலும் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை
தற்போதைய செய்திகள்

கிளந்தானிலும் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை

Share:

கோத்தாபாரு, டிச. 28-


திரெங்கானு மாநிலத்தில் பொது மக்கள் முன்னிலையில் கல்வத் குற்றவாளிக்கு 6 பிரம்படித் தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலத்திலும் அத்தகைய தண்டனை முறையை அமல்படுத்துவதற்கு மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் முன்னிலையில் 42 வயதுடைய கல்வத் குற்றவாளிக்கு எஸ்.ஓ.பி. நடைமுறையைப்பயன்படுத்தி, நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பது, மிகச்சிறந்த அணுகுமுறையாகும்.

இஸ்லாத்தின் ஷரியா சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி, கிளந்தானிலும் அந்த தண்டனை முறையை கொண்டு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் அஸ்ரி மாட் டாவுட் தெரிவித்தார்.

பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றும் முறையை கிளந்தான் மாநில அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், திரெங்கானு மாநில அரசாங்கம் செய்ததைப் போல தனது மாநில ஷரியா சட்ட நடைமுறைகளில் 2022 ஆம் ஆண்டிலே திருத்தம் கொண்டு வந்து இருப்பதை அந்த ஆட்சிக்குழு உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அந்த சட்டத்திருத்ததின்படி கிளந்தானில் பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்ற முடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்