Jul 5, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறையின் மாண்பைக் காக்க புத்ராஜெயாவில் திரண்டனர் 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்
தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் மாண்பைக் காக்க புத்ராஜெயாவில் திரண்டனர் 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

நாட்டின் நீதித்துறையின் மாண்பு, அதன் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் காக்கப்படுவதற்கு அடையாளமாக புத்ராஜெயாவில் நீதித்துறை கட்டடத்திற்கு முன், 400 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு, தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர்.

கருப்பு நிற அங்கியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்த வழக்கறிஞர்கள், நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, பல்வேறு சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் நீதித்துறைக் கட்டடத்திலிருந்து பிரதமர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர்களான அம்பிகா ஸ்ரீனிவாசகன், கேரன் சியா, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் ஆகியோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில், நீதித்துறையில் தனிநபர்களின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதே வேளையில் நான்கு அம்சங்களை உள்ளடக்கியப் பரிந்துரைகளை அவர்கள் முன் வைத்தனர். நேர்மையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஒருவர், நாட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும், போதுமான ஆதாரங்களுடன் தரமான தெளிவான, நேர்மையான தீர்ப்பின் உள்ளடக்கம் இருக்க வேண்டும், நீதிமன்றங்களில் காலியாகியுள்ள உயர் பதவிகள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது