Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பணியிடத்தில் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.27-

பணியிடத்தில் பெண் நோயாளியிடம் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பினாங்கு, ஜார்ஜ்டவுன், மருத்துவமனை ஒன்றில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் ஓர் அரசாங்கப் பணியாளரான 43 வயது மருத்துவர் நேற்று இரவு 9.30 மணியளவில் கைது செய்யப்பட்தாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலிருந்து கிடைக்கப் பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த ஆண் மருத்துவர் வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அப்துல் ரசாக் தெரிவித்தார்.

20 வயது மதிக்கத் தக்க பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது அந்த மருத்துவர் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை