ஜூலை 27-
கடற்படை பயிற்சி வீரர், Farhan Osman Zulkarnain- யை இஸ்திரி பெட்டியினால் சூடு வைத்து, உடல் முழுவதும் ரணமாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாக. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ஆறு முன்னாள் மாணவர்களுக்கு சாகும் வரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை MCPF எனப்படும் மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியம் இன்று தற்காத்தது.
அந்த ஆறு முன்னாள் மாணவர்களுக்கும் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்து, சாகும் வரை தூக்குத் தண்டனையை விதித்து இருக்கும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் தீர்ப்பு மிக பொருத்தமானதாகும் என்று MCPF துணைத் தலைவர் Ayub Yaakob வர்ணித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் அந்த ஆறு மாணவர்களுக்கு எதிரான தண்டனையை கடமையாகி இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக கொள்ளப்பட வேணடும். இதில் அனுதாபம் காட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று Ayub Khan குறிப்பிட்டார்.








