May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கோ ஹுவான் ஹுவா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜன. 18-


ஓராண்டு நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே தனது சேவையை நிறுத்திக்கொண்ட உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைனின் இணை இயக்குநர் கோ ஹுவான் ஹுவா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோ ஹுவான் ஹுவாவிற்கு எதிராக நடந்து வரும் சிவில் வழக்கை தொடுத்தவர்களான சுமார் 30 முதலீட்டாளர்களை உள்ளடக்கிய குழுவினர், ஷா ஆலாம், புக்கிட் ஜெலுத்தோங்கில் கோ ஹுவான் ஹுவா வசிக்கும் வீட்டின் நுழைவாயில் முன்புறம் இன்று ஒன்றுக்கூடிய நிலையில் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மைஏர்லைனில் தாங்கள் 80 லட்சம் ரிங்கிட்டை முதலீடு செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். அந்தப் பணம் திருப்பித் தரப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று அவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

முதலீட்டாளர்களில் 15 பேரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கூறுகையில், அந்த விமான நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக முதலீடு செய்தற்காக கோ ஹுவான் ஹுவாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக பேங்க் நெகாரா மலேசியா நடவடிக்கை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், போலீஸ்துறையோ அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமோ அந்த தொழில் அதிபருக்கு எதிராக தங்கள் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அப்படியென்றால் கோ ஹுவான் ஹுவாவிற்கு எதிராக இதுவரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் வினவினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்