மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, தம்மைப் பற்றிய விசாரணை தொடர்பான செய்தியாளர்களின் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் அண்மையி நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, இது தொடர்பான அரச விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மௌனம் காத்தார்.
தன்னைப் பாதிக்கும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து தாம் எவ்வித கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை என்றும், இது குறித்து ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டதாகவும் அசாம் பாக்கி தெரிவித்தார். மேலும், ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு 'ஊழல் மாஃபியா' என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கும் அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.








