Apr 29, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது
தற்போதைய செய்திகள்

பெர்லிஸில் தலையில் ஏற்பட்ட காயத்தால் 8 மாதக் குழந்தை மரணம்: பராமரிப்பாளர் கைது

Share:

பெர்லிஸ் மாநிலத்தில் 8 மாத பெண் குழந்தை மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்தில், 35 வயதுடைய பெண் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் மொக்சின் ரோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணைக்குப் பின்னர், அப்பெண் வரும் ஜூன் 16-ஆம் தேதி வரை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் ஏற்பட்ட உள்காயத்துடன் அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட தாக்குதலால், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் 16 தொகுதிகளில் போட்டியிட பாஸ் திட்டம் / 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் தொகுதிகள் இருமடங்காக அதிகரிப்பு

அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில்  அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு

அலிஃப் சுக்ரிக்கு எதிரான அவதூறு வழக்கில் அப்துல் காதிர் -க்கு சாதகமாகத் தீர்ப்பு

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

எஸ்.பி.ஆர்.எம் இரண்டாம் கட்ட விசாரணையில் ஜேம்ஸ் சாய் இன்று ஆஜரானார்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்ய நாம்வீ மனுத் தாக்கல்

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

நாடெங்கிலும் 17 இடங்களில் படிநிலை 1 வெப்ப எச்சரிக்கை - மெட்மலேசியா அறிவிப்பு

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்

ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவருக்கு அறுவை சிகிச்சை: தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்