May 6, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் – ஜோகூர் மின்சார ரயில் பயண அனுபவம் குறித்து கூலாய் எம்.பி பாராட்டு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் – ஜோகூர் மின்சார ரயில் பயண அனுபவம் குறித்து கூலாய் எம்.பி பாராட்டு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

கோலாம்பூர் – ஜோகூர் பாரு இடையிலான மின்சார ரயில் சேவை நேற்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியதையடுத்து, அதில் பயணம் செய்த தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங், தமக்கு இந்த ரயில் பயணமானது மனநிறைவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 4.40 மணியளவில் கூலாய் ரயில் நிறுத்தத்தில் ஏறிய அவர், 8.50 மணியளவில் கோலாலம்பூரை வந்தடைந்தார்.

கூலாயில் கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில், தாம் கோலாலம்பூர் வரை காரில் பயணம் செய்திருந்தால், குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்கள் ஆகியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், மின்சார ரயிலானது 4 மணி நேரத்தில் வந்தடைந்ததைப் பாராட்டினார்.

வசதியான இருக்கைகள், இதமான வெப்பநிலை, மின் socket-கள், Café உள்ளிட்ட பல வசதிகள், இந்த ரயில் பயணத்தை மிகவும் இனிமையாக்கியதாகவும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

அதே வேளையில், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே வரும் 2026-ஆம் ஆண்டு, ஜனவரி 11-ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் – ஜோகூர் இடையிலான இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் விலையில் 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது கேடிஎம்பி நிறுவனம்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்