மலேசியாவை சேர்ந்த ஐந்து நபர்கள், இந்தியாவில் ஒரு கோடியே 86 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் இந்திய போலீஸ் துறையிடமிருந்த எந்தவொரு விண்ப்பத்தையும் அரச மலேசிய போலீஸ் படை பெறவில்லை என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் தெரிவத்தார்.
இந்த சட்டவிரோத பண மாற்ற நடவடிக்கை தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படையின் உதவிக் கேட்டு இந்தியா எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்குமானால் உரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.







