May 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஏஐ: லுமுட்டில் பிரம்மாண்ட ஏஐ பாலிடெக்னிக் உதயம்!
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் ஏஐ: லுமுட்டில் பிரம்மாண்ட ஏஐ பாலிடெக்னிக் உதயம்!

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.03-

மலேசியாவின் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடும் வகையில், பேரா மாநிலத்தின் லுமுட்டில் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறப்பு பாலிடெக்னிக் அமையவுள்ளது. 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த ஏஐ பாலிடெக்னிக், அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என பாலிடெக்னிக், சமூகக் கல்லூரி கல்விப் பொது இயக்குநர் முகமட் ஸாஹாரி இஸ்மாயில் அறிவித்தார். இந்த நிறுவனம், ஏஐ துறையில் வளர்ந்து வரும் நிபுணத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து, மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News