Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலம் இனியும் டிஏபி கோட்டை அல்ல
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலம் இனியும் டிஏபி கோட்டை அல்ல

Share:

கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பினாங்கு மாநிலத்தை ஆட்சி செய்துவரும் டிஏபி-க்கு இனியும் அந்த மாநிலம், ஒரு பாதுகாப்பு அரனாக விளங்காது என்று மாநில பாஸ் கட்சித் தலைவர் முஹம்மது ஃபௌஸி யூசுஃப் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவின்படி கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சி அடையப்பெற்ற வெற்றியுடன் ஒப்பீடுகையில் டிஏபி, மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முஹம்மது ஃபௌஸி குறிப்பிட்டார்.

சுருங்கச் சொன்னால், பினாங்கின் அரசியல் நிலவடியமைப்பில் பாஸ் கட்சிக்கு மறைமுகமாக புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது என்று முஹம்மது ஃபௌஸி வர்ணித்துள்ளார்.

Related News