கெடா மாநில ஆட்சிக்குழுவில், உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் தாம் ஒருவரே அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று அமைக்கப்பட்ட கெடா மாநில ஆட்சிக்குழுவில் சனூசி முகமட் நூர், தாம் ஒருவரே 8 இலாக்களுக்கு பொறுப்பேற்று இருப்பது தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தில் 28 அமைச்சர்கள் உள்ளனர் . அந்த எண்ணிக்கைக்குள்ளேயே பலர், இரண்டு, மூன்று இலாகாக்களை ஏற்க வேண்டியிருப்பதைப் போல தாமும் 8 இலாகாக்களை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சனூசி நூர் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


