Dec 2, 2025
Thisaigal NewsYouTube
18 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவர் மரணம்
தற்போதைய செய்திகள்

18 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாணவர் மரணம்

Share:

நீலாய், நவம்பர்.12-

நீலாய், பண்டார் பாரு நீலாயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 18 ஆவது மாடியிலிருந்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்தது.

சீன நாட்டுப் பிரஜையான 18 வயதுடைய அந்த மாணவரின் உடல், அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் ஐந்தாவது மாடியில் கிடந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்த அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள், 999 எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த சீனப் பிரஜை தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து அந்த வீட்டில் வாடகைக்கு இருந்து வந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.

சவப் பரிசோதனைக்காக அந்த மாணவனின் உடல், ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்