இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மித்ரா வாயிலாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுக்கவிருக்கும் பிரத்தியேக நடவடிக்கைகளுக்கு மித்ரா சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ரா. ரமணன் வரவேற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்தியக்கால ஆய்வறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் வருமானம் குறைந்த இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மித்ரா வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது, இந்திய சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் கடப்பாட்டையும் காட்டுவதாக உள்ளது என்று சுங்கை பூலோ எம்.பி-யுமான ரமணன் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் அன்வாரை விரைவில் சந்திக்க விருப்பதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி


