Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்
தற்போதைய செய்திகள்

வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார்

Share:

டிச. 27-

முகநூல் விளம்பரம் ஒன்றின் மூலம் அறிமுகமான பங்குச் சந்தை முதலீட்டு மோசடியில் சிக்கி, வணிகர் ஒருவர் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை இழந்துள்ளார் என Johor Bahru Selatan மாவட்டக் காவல் துறை தலைவர் Asisten Komisioner Raub Selamat தெரிவித்தார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண் தன்னை முதலீட்டு ஆலோசகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.


கடந்த நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை, பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 14 பரிவர்த்தனைகளில் 8 இலட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை செலுத்தியுள்ளார். லாபத்தை திரும்ப எடுக்க வேண்டுமென்றால் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல் கேட்டதால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார் என Raub Selamat மேலும் சொன்னார்.


ஆரம்ப கட்ட விசாரணையில், மோசடியில் தொடர்புடைய மூன்று வங்கிக் கணக்குகளில் இரண்டு, ஏற்கனவே மோசடி புகார்களைக் கொண்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு