நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் திடீர் கனமழை மற்றும் வெள்ளம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய எவரெஸ்ட் மலையேற்ற முன்னோடியான டத்தோ என். மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
56 பேர் கொண்ட இந்தக் குழுவில் 39 மலேசியர்கள், 4 சிங்கப்பூரர்கள் மற்றும் 3 கனடியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் தங்கள் பயணப் பாதையை பாதிக்கவில்லை என்றும், குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக யாத்திரையைத் தொடர்ந்து வருவதாக மோகனதாஸ் தெரிவித்தார்.
கைலாஷ் மலையைச் சுற்றி மேற்கொள்ளப்படும் புனித கைலாஷ் கோரா யாத்திரையின் மூன்று நாள் பயணத்தில் அவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
நேபாள வெள்ளப் பேரிடரால் அச்சம் எழுந்த நிலையில், மோகனதாஸ் தலைமையிலான 39 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.








