முற்போக்கான சம்பள கொள்கைக்கான தேவையை நிறைவு செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஆவண வடிவில் சமர்ப்பிக்கும் முதலாளிமார்கள் அரசாங்கத்திடமிருந்து ரொக்க வெகுமதித் தொகையை பெறுவர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து இந்த ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுதற்கு முன்னதாக தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை முதலாளிகள் நிரூபிக்க வேண்டும் என்று ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டார்.
முற்போக்கான சம்பள முறைத் திட்டத்தில் முதலாளிமார்களுக்கு கண்மூடித்தனமாக ரொக்க வெகுமதியை அரசாங்கம் வழங்கிவிடாது என்பதையும் அவர் விளக்கினார்.
எந்தெந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்கியுள்ளதோ அந்த நிறுவனங்கள் மட்டுமே ரொக்க வெகுமதித் தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


