முற்போக்கான சம்பள கொள்கைக்கான தேவையை நிறைவு செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஆவண வடிவில் சமர்ப்பிக்கும் முதலாளிமார்கள் அரசாங்கத்திடமிருந்து ரொக்க வெகுமதித் தொகையை பெறுவர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து இந்த ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுதற்கு முன்னதாக தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை முதலாளிகள் நிரூபிக்க வேண்டும் என்று ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டார்.
முற்போக்கான சம்பள முறைத் திட்டத்தில் முதலாளிமார்களுக்கு கண்மூடித்தனமாக ரொக்க வெகுமதியை அரசாங்கம் வழங்கிவிடாது என்பதையும் அவர் விளக்கினார்.
எந்தெந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்கியுள்ளதோ அந்த நிறுவனங்கள் மட்டுமே ரொக்க வெகுமதித் தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


