Aug 6, 2026
Thisaigal NewsYouTube
முதலாளிமார்களும் ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுவர்
தற்போதைய செய்திகள்

முதலாளிமார்களும் ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுவர்

Share:

முற்போக்கான சம்பள கொள்கைக்கான தேவையை நிறைவு செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஆவண வடிவில் சமர்ப்பிக்கும் முதலாளிமார்கள் அரசாங்கத்திடமிருந்து ரொக்க வெகுமதித் தொகையை பெறுவர் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து இந்த ரொக்கத் தொகை அனுகூலத்தை பெறுதற்கு முன்னதாக தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை முதலாளிகள் நிரூபிக்க வேண்டும் என்று ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டார்.

முற்போக்கான சம்பள முறைத் திட்டத்தில் முதலாளிமார்களுக்கு கண்மூடித்தனமாக ரொக்க வெகுமதியை அரசாங்கம் வழங்கிவிடாது என்பதையும் அவர் விளக்கினார்.

எந்தெந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்கியுள்ளதோ அந்த நிறுவனங்கள் மட்டுமே ரொக்க வெகுமதித் தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற முடியும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News