ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-
சிக்கனக் கட்டண விமான நிறுவமான பாதிக் ஏர், கோலாலம்பூருக்கும், ஜப்பான் ஒசாகாவிற்கும் மீண்டும் விமானச் சேவையைத் தொடங்கவிருக்கிறது என்று அதன் தலைமைச் செயல் முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி தெரிவித்தார்.
பாதிக் ஏர் விமான நிறுவனத்தின் ஏர்பஸ் A330 விமானங்கள் மூலம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி கோலாலம்பூருக்கும், ஒசாகாவிற்கும் இடையிலான விமானச் சேவை தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








