ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இன்ரா மூலியா அமாட் என்ற அந்த நபர், பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி, முகநூலில் சுல்தானை அவமதிக்கும் கருத்தைப் பதிவிறக்கம் செய்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ப்ரிசில்லா ஹேமாமாலினி நடராஜா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இன்ரா மூலியா மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


