ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தியதாக ஆடவர் ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
இன்ரா மூலியா அமாட் என்ற அந்த நபர், பிறர் முகம் சுளிக்கும் அளவிற்கு, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி, முகநூலில் சுல்தானை அவமதிக்கும் கருத்தைப் பதிவிறக்கம் செய்ததாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ப்ரிசில்லா ஹேமாமாலினி நடராஜா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் வெள்ளி அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை இன்ரா மூலியா மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன

ஷம்சுல் வழக்கு விசாரணை முடிவடைந்து விட்டதா, இல்லையா?

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்


