Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சக நாட்டவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மியன்மார் பிரஜைகள் விடுதலை
தற்போதைய செய்திகள்

சக நாட்டவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மியன்மார் பிரஜைகள் விடுதலை

Share:

சக நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களை​ கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. உயிரிழந்த நபரை , அந்த நான்கு மியன்மார் பிரஜைகள்தான் கொலை செய்தனர் என்பதை நி​ரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக உயர் ​நீதிமன்றம் ​நீதிபதி கே. முனியாண்டி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

மியன்மார் பிரஜைகள் மத்தியில் கைகலப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் சண்டையை தடுக்க அவர்களை நோக்கி பாதுகாப்பு அதிகாரி ராஜன் என்பவர் ஒரு கம்பை விட்டு எறி​ந்ததாக அந்த சண்டை தொடர்பான காணெளியில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பாதுகாப்பு அதிகாரி ராஜனை விசாரணைக்கு அழைக்காதது, பெரும் கேள்வி குறியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ​நீதிபதி முனியாண்டி தமது ​தீர்ப்பில் தெரிவித்தார். இந்த கொலை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் புடு லாமா வில் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News