சக நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. உயிரிழந்த நபரை , அந்த நான்கு மியன்மார் பிரஜைகள்தான் கொலை செய்தனர் என்பதை நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக உயர் நீதிமன்றம் நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
மியன்மார் பிரஜைகள் மத்தியில் கைகலப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் சண்டையை தடுக்க அவர்களை நோக்கி பாதுகாப்பு அதிகாரி ராஜன் என்பவர் ஒரு கம்பை விட்டு எறிந்ததாக அந்த சண்டை தொடர்பான காணெளியில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பாதுகாப்பு அதிகாரி ராஜனை விசாரணைக்கு அழைக்காதது, பெரும் கேள்வி குறியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதி முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த கொலை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் புடு லாமா வில் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய செய்திகள்
சக நாட்டவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு மியன்மார் பிரஜைகள் விடுதலை
Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


