Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்

Share:

புதியதாக இயற்றப்படும் கொள்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர மக்கள் அணியக்கூடிய ஆடைகளை ஒழுங்குப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக இருக்கக்கூடாது என்று முன்னள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரஃபிதா அஜீஸ் கேட்டுக்கொண்டார்.

விதிமுறைகளும், அறிவுறுத்தல்களும் அகநிலை மதிப்பீடுகள் மற்றும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு இருக்குமானால் அதனால் கருத்துவேறுபாடுகளும் , எதிர்மறையான வாதங்களும் வளர்ப்பதாக மட்டுமே இருக்க முடியும் என்று ரபிடா அஸிஸ் குறிப்பிட்டார்.

மக்கள் அணியக்கூடிய ஆடைகளை கவனம் செலுத்துவதில் தங்களுக்கு தார்மீக கடப்பாடு உண்டு என்ற தோரணையில் அரசு துறைகள் செயல்படுமானால் அதனால் மக்கள் மத்தியில் விவாதங்கள் மட்டுமே தொடருமே தவிர சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு போதும் உதவாது என்று ரபிடா குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் கோலசிலாங்கூர் நகராண்மைக்கழக அலுவலகத்திற்கு ஒருவர், அரைக்கால் காற்சட்டையை அணிந்துள்ளார் என்பதற்காக அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர், அந்நபரை கால்கள் மறைக்கும் வண்ணம் கைலியை அணியும்படி உத்தரவிட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் ரபிடா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து