பெண்கள் மற்றும் குடும்ப மாதர்கள் எதிர்நோக்கி வரும் பாலியல் தொல்லைகள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பாலியல் தொல்லை தடுப்பு மீதான நடுவர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி நென்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
நீண்ட கால போராட்டமாக இருந்து வந்த நடுவர் மன்றம் தோற்றுவிக்கும் பரிந்துரைக்கு இறுதியில் பொதுச் சேவைத்துறை அங்கீகாரம் வழங்கி, நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியிருப்பதாக நன்ஸி சுக்ரி குறிப்பிட்டார்.








