Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

புகார் அடிப்படையிலேயே மலேசிய கினி நிருபர் கைது செய்யப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.03-

மலேசிய கினி நிருபர், B. நந்தக்குமாருக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட புகார் அடிப்படையிலேயே அந்த நிருபர் கடந்த வாரம், ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்தார்.

எந்தவொரு நபரும், தனக்காகவோ அல்லது மற்றவர்களுக்காக லஞ்சப் பணம் பெற்றாலோ அல்லது கேட்டாலோ அவரை ஊழல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான அதிகாரத்தை எஸ்பிஆர்எம் கொண்டுள்ளது என்று அஸாம் பாக்கி இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பாக ஏஜெண்டு ஒருவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படும் மலேசிய கினி நிருபர் நந்தகுமாரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்து, தற்போது தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரிங்கிட் வரை லஞ்சம் கோரியதாக நந்தகுமாருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அந்த ஏஜெண்டு, எஸ்பிஆர்எமில் புகார் செய்ததைத் தொடர்ந்து நந்தகுமாரைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டது.

லஞ்ச ஊழல் சட்டங்கள் என்பது அரசு துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்