கெப்போங், தாமான் எசான் பகுதியில் ஏற்பட்ட தீயில் நான்கு வீடுகள் தீயில் அழிந்த வேளையில் ஒருவரின் உயிரைப் பறித்த கோரத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடத்தையும், பாதிக்கப்பட்டவர்களையும் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறிய இலக்கவியல் அமைச்சரும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ, தமது நாடாளுமன்றத் தொகுதி சார்பாக பத்தாயிரம் ரிங்கிட்டும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சார்பில் தலா 5 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் மற்றும் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளையும் அவரது அலுவலகம் மேற்கொள்ளும் என கோபிந்த் சிங் உறுதியளித்தார்.












