இன்று ஏப்ரல் 27-ஆம் தேதி வரையில், மலேசிய ஊடக மன்றமான எம்எம்எம்க்கு, முறையற்ற புகைப்படங்கள் பயன்பாடு தொடர்பாக மொத்தம் 7 புகார்கள் கிடைத்துள்ளதாக தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்கள் செய்தி வெளியீட்டின் துல்லியம், அனுமதியின்றி படங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் போன்ற விவகாரங்களை உள்ளடக்கியவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 5 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 புகார்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் அதிகரிக்க, அனைத்து புகார்களும் தற்போது அதிகாரப்பூர்வ எம்எம்எம் தளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வழக்கும் முறையாக பதிவு செய்யப்பட்டு, மதிப்பாய்வு செய்து, தொழில்முறை ரீதியில் கையாளப்படுவதை இது உறுதி செய்கிறது என்று இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 21வது ஆசியான் செய்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தில் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.








