Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டுக் காப்புறுதித் திட்டத்தில் நில நடுக்கம் சேர்க்கப்பட்டுள்ளதா?
தற்போதைய செய்திகள்

வீட்டுக் காப்புறுதித் திட்டத்தில் நில நடுக்கம் சேர்க்கப்பட்டுள்ளதா?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.04-

ஜோகூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மிதமான நில நடுக்கம் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து வீட்டிற்கான காப்புறுதி பாலிசியை வாங்கியவர்கள், நில நடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குக் காப்புறுதி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சரிபார்க்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள், பேரிடர் போன்ற இயற்கைச் சீற்றத்திற்கு வீடுகளுக்குக் காப்புறுதி பாதுகாப்பு வழங்கும் அம்சத்தைச் சேர்த்துக் கொண்டு இருக்காது. மாறாக, தீ போன்றவற்றுக்கு மட்டுமே காப்புறுதிப் பாதுகாப்பு தர வல்லதாக இருக்கும் என்று PIAM (பியாம்) எனப்படும் மலேசிய பொது காப்புறுதிச் சங்கம் கூறுகிறது.

எனினும் சபா மற்றும் தீபகற்ப மலேசியாவில் சில இடங்களில் அண்மையில் உணரப்பட்ட நில நடுக்கங்கள், வீட்டிற்கான காப்புறுதிப் பாதுகாப்பைச் சரி பார்த்துக் கொள்வதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியை விடுத்துள்ளது என்று பியாம் தலைமை நிர்வாக அதிகாரி சுவான் கிம் சூன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வெள்ளத்தை விட பூகம்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வானிலை முறைகளைக் கணிக்க முடியாத நிலையில் அவை ஓர் அச்சறுத்தலாகவே மாறியுள்ளன. எனவே வீட்டிற்குக் காப்புறுதி பாலிசி எடுத்தவர்கள் அதில் இயற்கை சீற்றங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா? என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்வது அவசிமானதாகும் என்று சுவான் கிம் சூன் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி