சிங்கப்பூரில் மோசடி கும்பல்களுக்கு உதவுவதற்காக மலேசியர்கள் பயணம் செய்வது அதிகரித்து வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் பிற மதிப்புள்ள பொருட்களை சேகரிக்கும் பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று, அரசாங்க அதிகாரிகள் போல நாடகமாடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.
இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் கைது செய்யப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
21 வயதுடைய அந்த இளைஞர், குற்றச்செயல் மூலம் கிடைத்த பொருட்களை வைத்திருக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








