Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், டிச.26-


கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சரான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

அந்த அப்பிரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் அர்ப்பாட்டங்கள் தலைநகர் மபுதோவில் மட்டுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.

தற்போது மொசாம்பிக்கில் 20 மலேசியர்கள் உள்ளனர். அந்த 20 பேரின் நிலை குறித்து அந்நாட்டில் உள்ள மலேசிய கெளரவத் தூதரகத்தின் வாயிலாக தென் ஆப்பிரிக்க நாடான பிரேரோரியாவில் உள்ள மலேயசித் தூதரகம் தகவல் பெற்று வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி எதிர்கட்சிகள் வன்முறை கலவரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 130 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

Related News